சேலம் மாநகராட்சிஉலக மகளிர் தின விழாவில் 15 மகளிர்களுக்கு பதவி உயர்வு வழங்கினார்கள்

 சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் உலக  மகளிர் தினத்தை முன்னிட்டு மேயர் ஆ.இராமச்சந்திரன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சீ.பாலச்சந்தர் முன்னிலை வகித்தார்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும்  4 மண்டலங்களிலும் உள்ள மகளிர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் உலக மகளிர் தின விழாவில்  மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வருவாய் அலுவலர், நிர்வாக அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர் என 15 மகளிர்களுக்கு பதவி உயர்வு ஆணையை  மேயர் ஆ.இராமச்சந்திரன், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் வழங்கி பரிசுகளையும் வழங்கினார்கள். 
உலக மகளிர் தின விழாவில் பங்குபெற்ற அனைத்து மகளிர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் துணை மேயர் மா.சாரதாதேவி, மண்டலகுழுத்தலைவர் செ.உமாராணி, துணை ஆணையாளர் ப.அசோக்குமார், மாநகர கண்காணிப்பு பொறியாளர் ந.கமலநாதன், செயற்பொறியாளர்கள்  பழனிசாமி, திலகா, உதவி ஆணையாளர்கள் வேடியப்பன், சிந்துஜா, மற்றும் விழாவில்  கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மேயர் ஆ.இராமச்சந்திரன், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.