யானைக்கவுனி இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் முடிவுற்ற ஒருவழிப் பாதையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , தயாநிதி மாறன் திறந்து வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட யானைக்கவுனி பகுதியில் ரூ.71.26 கோடி மதிப்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் முடிவுற்ற ஒருவழிப் பாதையினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் இன்று (15.03.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57ல் அமைந்துள்ள யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் இரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், இராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும்.

இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி இரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீ.
அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் இராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியின் கீழ், ரூ.30.78 கோடி மதிப்பிலும், இரயில்வே துறையின் மூலம் ரூ.40.48 கோடி மதிப்பிலும் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒழிவழிப்பாதை முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்), மண்டலக் குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.