கோவிட் காலத்திற்கு பிறகான ஆரோக்கியமான நடத்தையை ஊக்குவிக்கும் ஒரு புதிய தொலைக்காட்சித் தொடர் 

சென்னை, செப்டம்பர், 2022: இன்று, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்எய்ட்) மற்றும் யூனிசெப் இணைந்து, தூர் சே நமஸ்தே (“தூரத்தில் இருந்து வாழ்த்துக்கள்!”) என்ற தலைப்பில் தூர்தர்ஷன் மற்றும் யூடியூப் தொடர்களை புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தின.

துர் சே நமஸ்தே, ஒரு பொழுதுபோக்கு-கல்வி வடிவத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான ஹிந்தி தொடர் ஆகும். இது தொற்றுநோய்க்கு பிந்தைய உலகின் சவால்களை எடுத்துக்காட்டுகிறது மற்றும் ஆரோக்கியமான நடத்தைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது. கோவிட்-19 தடுப்பூசி ஊக்குவிப்பு மற்றும் கோவிட்-19 பொருத்தமான நடத்தையைத் தொடர வேண்டியதன் அவசியம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பும்போது அவர்களின் கற்றல் மீட்புக்கு உதவுதல் ஆகியவை இத்தொடரில் அடங்கும்.

திருமதி எம்.எஸ்.ரோலி சிங் கூடுதல் செயலாளர் மற்றும் பணி இயக்குனர் (தேசிய சுகாதார பணி)  மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி நீரஜா சேகர் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். திருமதி. சிங், கோவிட்-19 தொற்றுநோயைப் பற்றிப் பேசினார் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகத்திற்கான முன்னோக்கி வழியை கோடிட்டுக் காட்டினார். சுகாதார மேம்பாட்டில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புகளின் முக்கிய பங்கு குறித்து திருமதி நீரஜா சேகர் பேசினார்.

இது குறித்து யுஎஸ்எய்ட் இந்தியாவின் மிஷன் இயக்குநர் செல்வி.வீனா ரெட்டி கூறுகையில், “கோவிட் 19க்கு எல்லைகள் எதுவும் கிடையாது, ஒவ்வொருவரும்  பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை. யுஎஸ்எய்ட் ஆனது தூர் சே நமஸ்தே-ஐ ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறது, இது புதிய இயல்பு வாழ்க்கையின் சவால்களையம், நல்ல சுகாதார நடைமுறைகள் மூலம் இவற்றை வழிநடத்துவதற்கான வழிகளையும் எடுத்துக்காட்டுகிறது” என்று கூறினார்.

யூனிசெப் இந்தியாவின் துணை பிரதிநிதி திரு அர்ஜுன் டி ஆக்ட் கூறுகையில், “திறமையான நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதில் தொலைக்காட்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்தியாவில் அறிவியல் ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிவோம், மேலும் தொற்றுநோய்களின் போது காட்சித் தொடர்புகளின் சக்தியைப் பார்த்தோம். தூர் சே நமஸ்தேயின் வெளியீட்டு விழாவிற்கு உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது பெரிய பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை மட்டும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளதால், உளவியல் சமூகத்தை ஆதரிப்பது போன்ற முக்கியமான கருப்பொருள்களைப் பற்றி விவாதிக்க ஒரு இடத்தையும் உருவாக்குகிறது” என்று கூறினார்.

பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தூர்தர்ஷன் டிஜி திரு. மயங்க் அகர்வால் கூறுகையில், “தூர் சே நமஸ்தே தற்போதைய காலங்களில் மிகவும் பொருத்தமான நிகழ்ச்சியாகும், மேலும் இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பாளராக, இது போன்ற நிகழ்ச்சிகள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வது எங்கள் கடமையாகும். யூனிசெப் உடனான இந்த கூட்டுறவைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் பொது நலனுக்காக எங்கள் பணியைத் தொடர எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் தூர் சே நமஸ்தே என்ற நாடகத் திரைப்படம் திரையிடப்பட்டது, இது பார்வையாளர்களை முக்கியக் கதையின் மூலம் அழைத்துச் சென்று, தடுப்பூசி ஊக்குவிப்பு மற்றும் கோவிட்-19 பொருத்தமான நடத்தை பற்றிய செய்திகள் பொழுதுபோக்குக் கல்வித் தொடரில் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த நிகழ்வில் நிகழ்ச்சியின் முன்னணி நடிகர்களான அங்கித் ரைசாடா, டோலி சாவ்லா மற்றும் அதுல் பர்ச்சுரே ஆகியோரைக் கொண்ட குழுவும் கிரியேட்டிவ் டீமில் இருந்து மானவ் ராத் மற்றும் மன்னிஷ் சிங் ஆகியோரால் நடத்தப்பட்டது.

இந்தத் தொடரை தேசிய திரைப்பட விருது வென்ற பத்மஸ்ரீ, நீல் மாதவ் பாண்டாவின் தயாரிப்பு நிறுவனமான எலியானோரா இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.

தூர் சே நமஸ்தே  என்ற கல்வித் தொடரானது தூர்தர்ஷனில் ஆகஸ்ட் 14, 2022 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது, சனிக்கிழமைகளில் மாலை 6-7 மணி முதல் மீண்டும் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சி  தூர் சே நமஸ்தே யூடியூப்  சேனலிலும் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *